ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாவக்கட்டுபாளையம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கருப்புசாமி தனியார் கல்லூரியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கருப்புசாமியும் பிஎஸ்சி பட்டதாரியான ஷாலினி என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி பண்ணாரி மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து பாதுகாப்பு கேட்டு வரப்பாளையம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனால் போலீசார் இரு வீட்டு பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி காதலர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்