கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பொள்ளாச்சி மலைப்பகுதியில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு சாரல் மழை பெய்வதால் வால்பாறையில் கடுமையான குளிர் நிலவுகிறது. மேலும் வால்பாறை-பொள்ளாச்சி மலைப் பகுதியில் பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனங்களை இயக்குகின்றனர். தற்போது விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு செல்கின்றனர். எனவே கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும் என போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.