தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தற்போது இறைவன், ஜவான் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை நயன்தாரா திருமணத்திற்கு முன்பாக பிரபுதேவாவை காதலித்த நிலையில் அது பிரேக்கப் ஆனது. அதன்பிறகு நடிகர் சிம்புவுடனான காதலும் பிரேக்கப் ஆனது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நயன்தாரா அதன் பிறகு மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்.

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இரு மகன்கள் இருக்கிறார்கள். தற்போது விக்னேஷ் சிவனால் தான் நடிகை நயன்தாரா குடிப்பழக்கத்தில் இருந்து படிப்படியாக மீண்டு வருவதாக பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். மேலும் நடிகை நயன்தாரா குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாக பயில்வான் சொன்ன விஷயம் அவருடைய ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.