தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கனகா. கரகாட்டக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய கனகா நடித்துக் கொண்டிருந்த போதே கடந்த 2007-ம் ஆண்டு கலிபோர்னியாவை சேர்ந்த பொறியாளர் முத்துக்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில நாட்களில் கனகாவின் கணவர் காணாமல் போய்விட்டார் என்று கூறப்படுகிறது. நடிகை கனகா மறைந்த நடிகை தேவிகாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை கனகாவின் பிஏவாக இருந்த ராமச்சந்திரன் என்பவர் அவரை காதலித்து வந்துள்ளார்.

இதுகுறித்து ராமச்சந்திரன் கனகாவிடம் கூறிய போது அதை தவறாக புரிந்து கொண்ட கனகா அவரை போலீசில் பிடித்துக் கொடுத்துள்ளார். ராமச்சந்திரன் இறந்த பிறகு தான் அவருடைய காதல் கனவாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் மனமுடைந்த கனகா வீட்டுக்குள் முடங்கியுள்ளார். கனகா வீட்டுக்குள் முடங்கிய போது அவருடைய தந்தையால் சில கொடுமைகளை அனுபவித்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடிகை கனகாவின் வீடு கூட தீப்பற்றி எரிந்தது. மேலும் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் கனகாவின் மோசமான நிலைமை பற்றி பிரபல விமர்சகர் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.