தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர் நரேஷ், பவித்ரா லோகேஷ் நடிப்பில் அண்மையில் உருவாகியுள்ள படம் “மல்லி பெல்லி”. பிரபல தயாரிப்பாளர் எம்.எஸ்.ராஜூ இப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் மே 26ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இத்திரைப்படத்தின் டீசரை பார்த்தால் இது நரேஷின் நிஜவாழ்க்கை கதையை அடிப்படையாக கொண்டது என்பது தெளிவாகிறது.

இதனிடையே நரேஷ் தன் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி சுவாரசியமான கருத்துக்களை தெரிவித்தார். இப்படத்தின் வாயிலாக உங்களது 3-வது மனைவியை பழிவாங்க விரும்புகிறீர்களா? என்ற கேள்விக்கு நரேஷ் சிரித்துக்கொண்டே பதிலளித்தார். பழிவாங்குதல் என்றால் வாளால் குத்துவது ஆகும். சினிமா என்பது பொழுதுபோக்கு ஆகும். ரூபாய்.15 கோடி செலவு செய்து பழிவாங்க முயற்சிக்க முடியாது என்று நரேஷ் கூறினார். நரேஷின் இக்கருத்து சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.