தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோட்டை கோவில் தெருவில் ஜாகீர் உசேன்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி மெக்கானிக்காக இருக்கிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் ஜாகீர் உசேன் நெசவாளர் காலனி பகுதியில் இருக்கும் லாரி உரிமையாளர் வீட்டு குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மூன்றாவது மாடியில் இருக்கும் மரத்தின் கிளைகளை சீர்படுத்தியுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி மாடியில் இருந்து கீழே விழுந்து ஜாகீர் உசேன் படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ஜாகீர் உசேன் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.