தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குண்டம்பட்டி கிராமத்தில் விவசாயியான காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் வெங்கட்ராமன் என்பவருக்கும் இடையே நில பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காளியப்பன் வளர்த்து வந்த நாயை வெங்கட்ராமன் நாட்டு துப்பாக்கியால் சுட்டார்.

இதனால் காயமடைந்த நாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த அரூர் வனச்சரக அலுவலர் நீலகண்டன் நேரில் சென்று விசாரணை நடத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வெங்கட்ராமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.