கடலூர் மாவட்டத்தில் உள்ள கேப்பர் மலை ரோடு சின்னையன் காலனியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் மணியின் வீட்டு பின்புறம் இருந்த மோட்டாரை கழற்றுவது போல அமர்ந்திருந்தார். இதனை மணி தட்டி கேட்டபோது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த ஆறுமுகம் மணியை தகாத வார்த்தைகள் திட்டி தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஆறுமுகத்தை கைது செய்தனர்.