கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிநாராயணபுரத்தில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறான். கடந்த 2 ஆண்டுகளாக கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்ற அன்று வினோத்குமார் அவரது தந்தை ராஜேந்திரன், தாய் அமுதா மற்றும் உறவினர்கள் பாக்கியலட்சுமியிடமிருந்து 10 பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு அவரை சரமாரியாக தாக்கி வீட்டை விட்டு துரத்தினர். இதுகுறித்து பாக்கியலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ராஜேந்திரன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து வினோத் குமாரை கைது செய்தனர்.