கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமிக்கும் கடலூரை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்நிலையில் மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவர் அங்கு சென்றுள்ளார். பின்னர் இருவரும் தனிமையில் இருந்தனர். அதன் விளைவாக மாணவி தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

இதுகுறித்து அறிந்த பெற்றோர் மாணவியை கடலூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். இது பற்றி டாக்டர்கள் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி மாணவி அளித்த புகாரின் பேரில் கல்லூரி மாணவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.