தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் என்ற பெயரில் இரு பாகங்களாக படத்தை இயக்கினார். இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி உலகம் முழுவதும் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, விக்ரம் பிரபு, சோபிதா துலிபாலா போன்ற ஏராளமான பிரபலங்கள் நடிக்கிறார்கள். பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தற்போது ஈடுபட்டுள்ளது.

இன்று பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் பாடல் அகநக வெளியானது. இந்நிலையில் திரிஷா மற்றும் கார்த்தியின் டுவிட்டர் உரையாடல்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது நடிகர் கார்த்தி ஹாய் இளைய பிராட்டி என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பதில் வராததால் என்ன பதிலையே காணும் என கார்த்தி சோகமாக பதிவிட்டு இருந்தார். அதன் பிறகு திரிஷா என்ன வர்ணகுல இளவரசே என்று பதிவிட்டு இருந்தார். அதற்கு கார்த்தி தங்கள் தரிசனம் கிடைக்குமா என்று பதிவிட்டு இருந்தார். திரிஷா யோசித்து பதில் அனுப்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவுகள் தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.