1. பாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய குடும்பம் திலீப்குமார். இந்த குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் சாயிஷா. நடிகை சாய்ஷா தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ள நிலையில் நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு பெண் குழந்தை இருக்கிறது. திருமணத்திற்கு பிறகும் நடிகை சாய்ஷா நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது படங்களில் நடிப்பதற்கு கதை கேட்டு வருகிறார் சாய்ஷா.

இந்நிலையில் சிம்பு கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல திரைப்படத்தில் நடிகை சாய்ஷா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த பாடலில் சாய்ஷா உடன் சேர்ந்து கௌதம் கார்த்திக் நடனமாடி இருப்பார். நட்பின் காரணமாக மட்டுமே சாய்ஷா ஒரு பாடலுக்கு நடனமாட ஒப்புக் கொண்டுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையில் ராவடி என்ற குத்து பாட்டுக்கு நடனமாடியுள்ளார். மேலும் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் மார்ச் மாதம் 30-ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.