SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அகில இந்திய செயற்குழு உறுப்பினர் KKSM தெகலான் பார்கவி,    அதிமுக பாரதிய ஜனதாவோடு கூட்டணி வைக்கக்கூடாது.. அதிமுகவை அவர்கள் அழித்துவிடுவார்கள். தமிழகத்தை பொறுத்தவரைக்கும், தமிழகத்தினுடைய மதச்சார்பின்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் இங்கே அதிமுக உயிர்ப்போடு இருக்க வேண்டும். அதிமுக வீரியத்தோடு இருக்க வேண்டும். அதிமுக பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை ஒவ்வொரு நேரத்திலும், அதிமுகவினுடைய தலைவர்களுடைய கவனத்திற்கும் பொதுமக்களினுடைய கவனத்திற்கும் கொண்டு சென்ற மகத்தான பேரியக்கம் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா என்பதை நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

அந்த வகையில் தான் எப்போது அதிமுக பாஜகவினுடைய கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியே வருகிறோம் என்று அறிவித்தார்களோ, அப்போதே ஆரத்தழுவி அரவணைத்து இன்றைய முதல் இனிமேல் தமிழகத்தில் பாரதிய ஜனதா ஒருபோதும் தலை எடுக்க முடியாது. அடித்து அதிமுக தான் என்ற நம்பிக்கை ஏற்படுத்துகிற விதத்தில் எடப்பாடி பழனிசாமி  அவர்களை….  , உடனடியாக சந்தித்து வாழ்த்து தெரிவித்து இன்றைக்கு இலட்சக்கணக்கான மக்களை இங்கே ஒன்று திரட்டி சிறுபான்மை சமூக  மக்களின் ஆதரவு உங்களுக்கு இருக்கிறது.

இஸ்லாமிய பெருங்குடி மக்களுடைய ஆதரவும் உங்களுக்கு இருக்கிறது. வருங்காலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் – சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவும் இணைந்து களம் கண்டால்  நிச்சயமாக அது நமது காலம்தான் என்பதை உறுதியாக சொல்லும் விதத்தில் இந்த மகத்தான மாநாட்டில் ஒன்று சேர்ந்திருக்கிறோம். இறைவன் அருள் புரியட்டும். காலம் அதற்கான விடையை சொல்லும் என்று சொல்லி எனது வார்த்தைகளை நிறைவு செய்கிறேன் என பேசி முடித்தார்.