அண்ணா நினைவு நாளையொட்டி ஸ்பெயினில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்துக்கு முதல்வர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், ஸ்பெயினில் அறிஞர் அண்ணாவுக்கு மரியாதை செலுத்தும் புகைப்படத்தை வெளியிட்டார். அதில், முக ஸ்டாலினுடன் அவரது மனைவி மற்றும் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர் பி ராஜா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். அதோடு அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக – அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை #அண்ணா அவர்களின் நினைவுநாள்!

இன்று அமைதிப் பேரணியாகச் சென்ற கழக உடன்பிறப்புகள், பேரறிஞர் #Anna சொன்ன கடமை – கண்ணியம் – கட்டுப்பாட்டோடு உழைத்து மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு ஒன்றியத்தில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும்! எண்ணித் துணிக கருமம்!” என தெரிவித்துள்ளார்.