ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூசாரியூரில் சந்திரா சேகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 20-ஆம் தேதி கரட்டடிபாளையம் காலேஜ் பிரிவு அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். நேற்று காலை சந்திர சேகரன் அவரது வீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததைக் கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்திர சேகரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சந்திரசேகரன் பங்கு சந்தையில் பணம் முதலீடு செய்ததில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு அவர் கத்தியால் கையை அறுத்து தற்கொலை முயற்சி ஈடுபட்டுள்ளார். அவரை உறவினர்கள் காப்பாற்றினார்கள். இந்நிலையில் தனியாக வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்த சந்திரசேகரன் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.