ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி அருகே தனியார் மில் அமைந்துள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தனது 17 வயது மகளை கடந்த 10 நாட்களுக்கு முன்பு வேலைக்காக அழைத்து சென்றுள்ளார். அவருடன் பரசுராமன்(41) என்பவரும் வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு சேர்ந்த மறுநாளில் இருந்து சிறுமியிடம் இருந்து எந்த தகவலும் வராததால் சிறுமியின் தாய் கோபி சென்று மில்லில் விசாரித்தார். அப்போது வேலைக்கு சேர்த்து விட்ட மறு நாளே பரசுராமன் சிறுமியை அழைத்து சென்றதாக தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமியும், பரசுராமனும் திருப்பூரில் இருக்கும் வீட்டில் தங்கி இருப்பது தெரியவந்தது. அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் பரசுராமனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.