ஈரோடு மாவட்டத்திலுள்ள விஜயமங்கலம் அருகே இருக்கும் காலனியில் பாலாஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூரில் கட்டிட வேலை பார்த்து வந்தார். இவர் விஜயா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாலாஜி கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டிற்கு செல்லாமல் விஜயமங்கலம் பகுதியில் இருக்கும் கடைகளில் குப்பை எடுத்து அங்கேயே தங்கி வேலை பார்த்துக் வந்தார். நேற்று தீபாவளி அன்று அங்கு இருக்கும் டீக்கடை அருகே பாலாஜி இறந்து கிடந்தார்.

அவரது இடது காது மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் வந்துள்ளது. அவரது உடலுக்கு அருகே பட்டாசுகள் வெடித்து சிதறி கிடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று பாலாஜியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நள்ளிரவு 12 மணிக்கு மதுபோதையில் அணுகுண்டு வெடியை வைத்தபோது வெடி விபத்தில் பாலாஜி இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.