கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அலசனத்தம் ஜெய் நகர் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தியாகராஜன் வரி ஆலோசகராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தியாகராஜனின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலை இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலிருந்த செல்போன் எண்ணை தியாகராஜன் தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய நபர் குறைந்த அளவு முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.

இதனை நம்பி தியாகராஜன் பல்வேறு தவணைகளாக 59 லட்சத்து 11 ஆயிரத்து 250 ரூபாய் பணத்தை செலுத்தியுள்ளார். அதன் பிறகு அவருக்கு பணம் வரவில்லை. லாபமும் கிடைக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தியாகராஜன் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.