திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கருங்குளம் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சங்கரி என்ற மனைவி உள்ளார் நேற்று தங்கராஜ் டிஐஜி அலுவலகம் எதிரே இருக்கும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தங்கராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று தங்க ராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.