தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு 700-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றது. மேலும் 310 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத மாடுகளுக்கும் சில்வர் பாத்திரங்கள், சைக்கிள் உள்ளிட்ட பரிசுகள் கொடுக்கப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கோட்டாட்சியர் செ. இலக்கியா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.