சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லுவழி கிராமத்தில் ஜேக்கப் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தை சின்னப்பன் தாய் உபகாரமேரி, ஜேக்கபின் மனைவி அரசி, மகள் ஜெர்லின், மகன் ஜோபின் ஆகியோர் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று திடீரென வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் தூங்கிக் கொண்டிருந்த சின்னப்பன், உபகாரமேரி, அரசி, ஜெர்லின், ஜோபி ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

அதன் பிறகு வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஐந்து பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.