தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் இரண்டாவது தெருவில் மருதுபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வே ஸ்டோர் கீப்பராக வேலை பார்க்கிறார். இவரது சகோதரர் சுடலை முத்துவிக்கும் சகோதரி செல்வ லட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதுகுறித்து செல்வ லட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சுடலை முத்துவிடம் விசாரணை நடத்தினர். இதற்கு மருதுபாண்டி தான் காரணம் எனக்கூறி சுடலைமுத்து, சரவணகுமார், மணி வெங்கடேஷ் மற்றும் 18 வயது கல்லூரி மாணவர் ஆகியோர் மருது பாண்டியனை தாங்கியுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் கல்லூரி மாணவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.