திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தெற்கு ரா வீதியில் கேரள மாநிலத்தில் சேர்ந்த ஹரிபிரசாத் என்பவர் காரை நிறுத்திவிட்டு ஹோட்டலுக்கு சென்றார். அப்போது திடீரென வந்த மர்ம நபர்கள் காரின் கண்ணாடியை உடைத்து இரண்டு பைகளை திருடி சென்றுள்ளனர். அந்த பைகளில் விலை உயர்ந்த கேமராக்கள் இருந்துள்ளது.

இதுகுறித்து ஹரி பிரசாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் செல்வக்குமரன் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த கேமரா உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.