தென்காசி மாவட்டத்தில் உள்ள பாம்புகோவில் சந்தை பகுதியில் விவசாய ராஜு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். சற்று மனநலம் பாதிக்கப்பட்டதால் கலைச்செல்வி அவ்வபோது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ராஜுவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த கலைச்செல்வி மண்வெட்டியால் தனது கணவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த ராஜு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற ராஜுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கலைச்செல்வியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.