புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் அரண்மனைகொல்லை பகுதியில் துரைப்பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடு, நாய், பூனைகளை வளர்த்து வருகிறார். வழக்கமாக பூனையும், நாயும் சண்டை போடும். ஆனால் இவரது வீட்டில் வளரும் நாயும், 5 மாத பூனை குட்டியும் ஒன்றாகவே விளையாடுகின்றன.

தற்போது அந்த நாய் 4 குட்டிகளை ஈன்றுள்ளது. இந்நிலையில் நாய் தனது குட்டிகளுடன் சேர்த்து பூனைக்கும் பால் கொடுத்து வருகிறது. இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் நாயையும், புனைக்குட்டியையும் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.