புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழவேதிப்பட்டி பகுதியில் விவசாயியான மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 15-ஆம் தேதி மாணிக்கம் புதுப்பட்டியில் இருக்கும் வங்கி ஏ.டி.எம்-மில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அங்கு பணம் வராததால் புதுவளவு ரோட்டில் இருக்கும் மற்றொரு ஏ.டி.எம்- மில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு நின்ற ஒருவரிடம் பணம் எடுத்து தருமாறு மாணிக்கம் உதவி கேட்டுள்ளார். அந்த நபர் பணம் வரவில்லை எனக் கூறி மாணிக்கத்தின் ஏ.டி.எம் கார்டுக்கு பதிலாக வேறு ஒரு கார்டை கொடுத்து அனுப்பியுள்ளார்.

சிறிது நேரம் கழித்து மாணிக்கத்தின் வங்கி கணக்கில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் ஏ.டி.எம் கார்டு மூலம் எடுக்கப்பட்டதாகவும், புதுக்கோட்டையில் இருக்கும் நகை கடையில் 30 ஆயிரம் ரூபாய்க்கு நகை வாங்கியதாகவும் குறுந்தகவல் வந்தது. இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த மாணிக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மோசடி செய்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.