பீகாரில் மது விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் மது அடிமைக்கு ஆளானவர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சி குடிக்கின்றனர். அம்மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 40-ஐ எட்டியுள்ளது. இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் கருணைத் தொகையாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்து உள்ளார்.

ஈடிவி பாரத்தின் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் கடந்த 15ம் தேதி முதல் 40 பேர் வரையில் உயிரிழந்திருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. துர்கௌலியா, ஹர்சித்தி, சுகௌலி, ரகுநாத்பூர் மற்றும் பஹர்பூர் ஆகிய மாவட்டங்களில் இந்த கள்ளச்சாராயம் குடித்ததால் பலரும் உயிரிழந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் இதுகுறித்து தங்களது கடமையை செய்ய தவறியதாக பலரையும் அம்மாநில அரசு பணியிடைநீக்கம் செய்துள்ளது.