சென்னையில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியின் பேராசிரியர்கள் மீது பாலியல் புகார் குற்றசாட்டுகள் எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அக்கல்லூரியின் பேராசிரியர் ஹரி பத்மன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பேராசிரியர் ஹரி பத்மனுக்கு ஆதரவாக தற்போது பிக்பாஸ் புகழ் நடிகை அபிராமி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை அபிராமி பேசியதாவது, நானும் கலாஷேத்ரா மாணவிதான். தற்போது கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியர் ஹரிபத்மன் மிகவும் நல்லவர். அவர் எங்களிடம் தவறாக நடந்து கொண்டது கிடையாது‌. தற்போது மாணவிகள் தூண்டிவிடப்படுகிறார்கள். இதற்கு காரணம் 2 பேராசிரியைகள் தான் என்று கூறியுள்ளார். மேலும் நடிகை அபிராமி இப்படி கூறியதற்கு அவருக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.