தமிழ் சினிமாவில் போடா போடி என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இந்த படத்திற்குப் பிறகு நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கியுள்ளார். அதன் பிறகு நடிகர் விக்னேஷ் சிவனுக்கு அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஏகே 62 திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஆனால் ஏகே 62 திரைப்படத்தின் கதையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக விக்னேஷ் சிவன் படத்திலிருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளிவந்தது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விக்னேஷ் சிவன் ஏகே 62 படவாய்ப்பு பறிபோனது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, எனக்கு ஏகே 62 திரைப்படத்தின் வாய்ப்பு பறிபோனது சற்று ஏமாற்றம்தான். இதில் அஜித் சார் பக்கம் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அஜித் சார் படத்தை இயக்கும் வாய்ப்பு தற்போது மகிழ் திருமேனிக்கு கிடைத்துள்ளது. மகிழ் திருமேனி கேரியரில் இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்று கூறியுள்ளார். மேலும் அஜித் சார் பக்கம் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று விக்னேஷ் சிவன் கூறியுள்ளதால் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்சினையால்தான் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார் என நெட்டிசன்கள் பலரும் கூறி வருகிறார்கள்.