தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் சேர்ந்து ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து கும்பகோணம் அடுத்த மேலவழவத்தூரில் உள்ள கிராமத்தில் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றார். குலதெய்வ கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நயன்தாரா சென்றிருந்தபோது அவரை காண்பதற்காக கிராம மக்கள் அங்கு ஒன்று திரண்டனர். அவர்களைப் பார்த்து நயன்தாரா சிரித்தபடி கையசைத்தார். அதன் பிறகு அவர்களுடன் சேர்ந்து நயன்தாரா செல்பி எடுத்துக் கொண்டார். அப்போது ஒரு பெண் நயன்தாராவின் தோளின் மீது கை போட முயற்சி செய்ததால் நயன்தாரா அவரை கண்டித்தார்.

குலதெய்வ கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு ஐராதீஸ்வரர் ஆலயத்திற்கு நயன்தாரா சென்றார். அங்கும் நயன்தாராவை காண்பதற்கு பலர் காத்திருந்ததால் அவர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்தார். இதைத்தொடர்ந்து ரயிலில் நயன்தாரா ஏறிய போது ரசிகர் ஒருவர் ரயிலுக்குள் அத்திமீறி நுழைந்து நயன்தாராவுடன் சேர்ந்து செல்பி எடுக்க முயற்சித்தார். இதனால் கடும் கோபத்தில் காணப்பட்ட நயன்தாரா செல்பி எடுத்தால் செல்போனை உடைத்து விடுவேன் என ரசிகரிடம் கூறினார். அதன் பிறகு அந்த நபர் அங்கிருந்து கிளம்பி சென்றார். மேலும் சாமி தரிசனம் செய்வதற்காக சென்ற இடத்தில் ரசிகர்கள் பலரும் கூடி நிம்மதியாக சாமி கும்பிட விடாமல் போட்டோ எடுக்க வேண்டும் என அடிக்கடி தொந்தரவு செய்ததால் நயன்தாரா சற்று கோபமாக காணப்பட்டார் என்று கூறப்படுகிறது.