தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து ஏகே 62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில், கதையில் ஏற்பட்ட சில முரண்பாடு காரணமாக படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அதன்பிறகு ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்குவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தின் இயக்குனர் குறித்து பேசியுள்ளார். அதாவது ஏகே 62 திரைப்படத்தின் வாய்ப்பு பறிபோனது தனக்கு சற்று ஏமாற்றம் தான் என்று கூறியுள்ளார். அதன்பிறகு மகிழ்திருமேனிக்கு ஏகே 62 திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படம் அவரின் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்று விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். மேலும் இதன் மூலம் தற்போது ஏகே 62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவது உறுதியாகியுள்ளது.