காட்டு தீயில் சிக்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சிலி நாட்டில் திடீரென பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. அதாவது சிலி நாட்டில் வெப்ப காற்று காரணமாக 150-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டு தீ பரவியுள்ளது. இந்த காட்டுதீ 34 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் பரவியுள்ளது. மேலும் இந்த காட்டுத்தீயில் சிக்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த காட்டுத்தீயை அணைப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை மையம்‌ தெரிவித்துள்ளது.