திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் சாலையை கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த கார் மோதியது. இதில், தூக்கிவீசப்பட்ட 8-ம் வகுப்பு மாணவர்கள் ரபீக், விஜய், சூர்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழும் காட்சி நெஞ்சை உலுக்குகிறது.