அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் மு க ஸ்டாலின், இலவச அரசு பேருந்து மூலம் இதுவரை 236 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் பெண்கள் பொருளாதரத்தில் தன்னிறைவு பெற்று உள்ளனர். இளைஞர்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் வகையில் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இலக்கை நோக்கிய பயணத்தில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.