தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சியின் போது அளித்த பேட்டி தற்போது வைரல் ஆகி வருகிறது. அதாவது பிரபல தொகுப்பாளர் கோபிநாத் முதல்வர் ஸ்டாலினை பிரத்யேக பேட்டி எடுத்துள்ளார். அப்போது அவர் கேட்ட பல கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் கொடுத்துள்ளார். அவர் முதல்வரிடம் உங்களுக்கு செந்தாமரையா அல்லது உதயநிதியா யாரை பிடிக்கும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு இருவருமே என்னுடைய இரு கண்கள். அவர்கள் என்னை கேட்காமல் எதையும் செய்ய மாட்டார்கள்.

அவர்கள் காதல் திருமணம் தான் செய்து கொண்டார்கள். இருவரும் முதலில் என்னிடம் தான் காதலை சொன்னார்கள். நான் என் மனைவியோடு கலந்து பேசி அவர்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்தேன் என்றார். அதன் பிறகு எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் சீக்கிரமாக திருமணம் நடந்து விடும். எனக்கும் 22 வயதில் திருமணம் நடந்து விட்டது. மேலும் அரசியல் குடும்பம் என்பதால் அவ்வளவு சீக்கிரத்தில் வரன் அமையவில்லை என்று கூறினார்.