சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையில் ஆடம்பர பொருட்களும், பணமும் இருந்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. தொழில் அதிபர்களை ஏமாற்றி பணமோசடி செய்த வழக்கில் அமலாக்கத் துறையால் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு டெல்லியிலுள்ள மண்டோலா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் சிறைச்சாலையில் அவர் சொகுசாக வாழ்வதாக தகவல் கிடைத்தது. இதனால் காவல்துறையினர் அவரது அறையில் நடத்திய சோதனையில் பணம், ஆடம்பர ஆடை, காலணிகள் உள்ளிட்ட பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதன்பின் சிறையிலிருந்த பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், விசாரணை நடத்தினர்.