தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வராக இருந்த ஜெயலலிதா…  திமுக ஆட்சி காலத்தில் அவமானப்படுத்தப்பட்டது குறித்த விவாதத்தில் காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசருக்கும்,  அதிமுகவின் முன்னாள் அமைச்சரான  ஜெயக்குமாருக்கும் இடையான வார்த்தை போர் தொடர்ந்து நீண்டு கொண்டு வருகிறது.இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் கட்சி சேர்ந்தமுலை திருநாவுக்கரசருக்கு சித்தம் கலைந்து விட்டது என்று ஜெயக்குமார் விமர்சனம் செய்திருந்தார்.

இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த திருநாவுக்கரசர், அவனுக்கு தான் சித்தம் கலங்கி போயிடுச்சு. ஏற்கனவே மெண்டல் மாதிரி பல காரியங்கள் பண்ணி… பொம்பள கேஸ் வரைக்கும்  பேசப்படுது. நான் கேவலமா பேசிடுவேன். என்ன பத்தி அவன் பேசுவதை நிறுத்திக் கொள்ளணும்? என்னை பேச  யோகிதே கிடையாது. நான் தான் ஜெயக்குமாரை தொகுதி இளைஞர் அணி தலைவரா ? போட்டேன். என்ன யோகிதையில் என்னை விமர்சனம் பண்றான் என ஆதங்கப்பட்டார்.