சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதிய JEE மெயின் நுழைவுத்தேர்வு முடிவுகளானது இன்று வெளியாகியுள்ளது.

தேசிய தொழில்நுட்ப நிறுவனம், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், மத்திய அரசின் நிதி உதவி பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளால் நிதி உதவி அளிக்கப்பட்ட (அ) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்காக JEE ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

வருடத்திற்கு 2 முறை இத்தேர்வு நடத்தப்படும் நிலையில், முதல்கட்டமாக சென்ற ஜன,.24 ஆம் தேதி முதல் பிப்,.1ம் தேதி வரை தேர்வு நடைபெற்றது. சுமார் 9 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், இன்று(பிப்,.7) தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. தேர்வர்கள் ஆன்லைன் வழியே தங்களது மதிப்பெண் விபரங்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. jeemain.nta.nic.in எனும் அதிகாரப்பூர்வமான இணையதளத்துக்கு சென்று தேர்வு முடிவுகளை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்து இருக்கிறது.