செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி தமிழக ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், நீட்டைப் பொறுத்தவரை நாடு முழுவதும் நீட்டினால் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு ஆட்சி செய்திருக்கக் கூடிய அரசு,  வந்த உடனே முதல் கையெழுத்து நாங்கள் நீட்டுக்கு எதிரா போடுவோம் என சொல்லிட்டு,  இன்னைக்கு கையெழுத்து இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அப்போ முதல் கையெழுத்து என்ன ஆச்சு ? தலையெழுத்தையே  மாற்றுவேன் என்று சொன்னார்கள். என்ன ஆச்சு ? இப்போ  கையெழுத்து இயக்கம் நடத்துறேன்னு சொல்றீங்க. சுப்ரீம் கோர்ட்தின் தீர்ப்பை மறந்து,   ஒரு தலைப்பட்சமாகவே நடந்து கொண்டிருப்பது சரியில்லை.  இன்னொரு பிரச்சனை. கிரிக்கெட் மைதானத்தில் ஜெய் ஸ்ரீ ராம் கோஷமிட்டது சரியானது.  ரொம்ப சரியானது…  இப்ப நானே பார்த்து இருக்கேன்.

வெற்றியின் உணர்வு வரும்போது,  எனக்கு வெற்றியை கொண்டாடுவதற்கு என்ன தோன்றும் ? ஏன் மனசை புண்படுத்துகிறது…  அதே மாதிரி நீங்களும் கோஷம் போட்டு போங்க. உங்களுக்கு நானே பார்த்திருக்கிறேன்..   எங்களோட தோழிகள் ஓஹோ ஜீசஸ் அப்படின்னு சொல்லுவாங்க. ஓஹோ அல்லா அப்படின்னு சொல்லுவாங்க.. சொல்லிட்டு போகட்டும்.  ஜெய் ஸ்ரீ ராம்  அப்படி அவங்க சொன்னதுனால மற்ற மதத்தைச் சார்ந்த சாமிகளை சொல்ல வேண்டும் என்று யாரும் சொல்லலையே…

யாருக்கு என்ன உணர்வு உள்ளே இருந்து வெற்றியை….  கொண்டாடுவதற்கு வருகிறதோ,  அதை அவர்கள் கொண்டாடினார்கள். இன்னொரு மத்தை  சார்ந்த நம்பிக்கை உள்ளவர்கள் இதுதான் எனக்கு வெற்றியின் வெளிப்பாடு என்றால் சொல்லுவாங்க….  யாருமே அதை சொல்ல வேண்டாம்னு சொல்லல. ஆக இது வெற்றியின் வெளிப்பாடு… ஒரு உற்சாகம் வரும்போது,

நாம் அந்த இறைவன் தான் நமக்கு அந்த வெற்றியை கொடுத்தாங்கன்னு அவங்க நினைக்கும் போது…  அதை சொல்வதில் தப்பில்லை. மற்ற மதத்தை சார்ந்தவர்களும்…  அவர்கள்  எந்த மதத்தை சார்ந்த நம்பிக்கை உடையவர்களோ, அந்த நம்பிக்கையோடு அவர்கள் சொல்வதையும் குறை என்று சொல்ல முடியாது. அதனால நாம அதை தப்புன்னு சொல்ல முடியாது என்பது என்னுடைய கருத்து என தெரிவித்தார்.