சென்னையில் நாளை ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள நிலையில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போட்டியை பார்த்து விட்டு திரும்பும் ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை வழக்கத்தை விட கூடுதலாக ஒரு மணி நேரம் அதாவது இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் போட்டிக்கான டிக்கெட்டை காண்பித்து எந்தவித கட்டணமும் இல்லாமல் ரசிகர்கள் பயணம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி கட்டண வாயிலில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் போட்டிக்கான டிக்கெட்டில் உள்ள பார் கோடு இன்றியமையாதது. இதனால் டிக்கெட் சேகமடையாமல் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்.