செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி பிரிவின் மாநில தலைவர் MP ரஞ்சன் குமார், மன்சூர் அலிகான் ஒரு நடிகர். அவர் எதார்த்தமாக பேசக்கூடியவர்.  என்னுடைய கருத்து என்ன என்றால் ? அவர் சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர் ரஜினிகாந்த் பேசும் பொழுது வராத கண்டனம்…..  மன்சூர் அலிகான் பேசும் போது வருகிறது என்றால்,  இதில் உள்நோக்கம் இருக்கிறது என்பதுதான் எங்களுடைய கருத்து.

எங்களுடைய வழக்கறிஞரிடம் கூடி ஆலோசனை நடத்தி இருக்கின்றோம்.  பட்டியலில் சமூக மக்களை இழிவுபடுத்தியதனால் அவர்கள் மேல் PCR கேஸ் போட வேண்டும் குஷ்பூ மேல் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று கமிஷனரிடமும்  கொடுப்போம். அதற்கு பிறகு SC/ST கமிசனிடமும் நடவடிக்கை எடுக்க புகார் கொடுப்போம்.

24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால்,  கண்டிப்பாக அடுத்தடுத்த கட்டங்களாக இதை எடுத்துச் செல்வதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். இதை விடமாட்டோம்… திருமதி குஷ்பு அவர்கள்  மன்னிப்பு கேட்காத வரை நாங்கள் இதைவிட மாட்டோம்…

காங்கிரஸ் கட்சியில் இருக்கின்ற அடிப்படை உறுப்பினர்கள் எல்லாரும் கலந்து கொள்வோம்.  நான் தான் தலைமை தாங்குவேன்.  முன்னெடுப்பதில் நிறைய தலைவர்கள்…. காங்கிரஸ் கட்சியில் இருக்கின்ற எல்லருமே கலந்து கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது என தெரிவித்தார்.