தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, மயிலாடுதுறை, வேலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் , அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் பகல் ஒரு மணி வரை தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.