நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தெய்வம் தான் என இருக்கு. கடவுள் தமிழனுக்கு கிடையாது. இறைவன் இருக்கான்…  .அதுக்கு தான் காரணம் சொல்லிட்டனே….  முறை செய்து காப்பாற்றும்,  மன்னவன்…. மக்களுக்கு இறை என்று வைக்கப்படும்…தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனான் பவர்க்கு. எல்லாம் சொல்லிட்டாரு.

மணி நீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண். இதை நுட்பமாய் கவனி. மணிநீர், மண்,  மலை,  அணிநிழற்காடு இது நாளும் உடையது தான் அரண். ஒரு நாட்டுக்கு…. இந்த நாளும் உன்னிடமம்  இருக்கா என யோசிச்சிக்க … நீரும் கிடையாது, மண்ணும் கிடையாது, மலையும் கிடையாது, காடும் கிடையாது. அப்போ இது  நாடா ? சுடுகாடா ? என்பதை பாத்துக்க. எல்லாத்தையும் பகுத்து,  வகுத்து நாம் முன்னோர்கள்  தந்து விட்டார்கள். வழி நடத்தி செய்வதற்கு தான் இங்க ஆள் இல்ல.

சுத்தம் சுகம் தரும். எல்லா சுவற்றிலும் எழுதி கிடக்கிறது உடன்பிறந்தார்களே…. ! இறங்கி கூட்டுபவன் எவன். அவன்தான் இவன்… ..அவன் தான் நீ….. அவன்தான் நான்….  அவன்தான் நாம் தமிழர் ….  இந்த இனத்தில் பிறந்ததிலேயே தமிழ் பேரினத்திற்கு என்று ஒரு தேசம்வேண்டும்  என்ற கனவு கண்ட ஒரே மகன்  நம் உயிர் தலைவன் பிரபாகரன் மட்டும் தான்.

 அவனுடைய பாட்டன்… என்னுடைய பாட்டன்.. உன்னுடைய பாட்டன்… அரசனுக்கு அரசன்…. அருண்மொழி சோழன்… அவன் அன்பு மகன் இராசேந்திர சோழன் …. இந்த கனவு இருந்திருந்தால் ? உலகில் பாதி நாடு தமிழர் நாடு. அவன் பொழுதுபோக்கு போரிட்டு போயிட்டான்.

இந்த இந்திய நில பரப்பு அடிமைப்பட்டு கிடைக்கும் போது எங்களுடைய பெருமைமிக்க… மதிப்புமிக்க…. தாத்தாக்கள் எங்களுக்கு செய்த துரோகம்…. தெய்வத்திருமகன் முத்துராமலிங்க தேவரும்,  பெருந்தலைவர் எங்கள் தாத்தா காமராஜரும் செய்த துரோகம் என தெரிவித்தார்.