தெலுங்கானாவின் கச்சிபவுலி நகரில் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் 26 வயது ஆசிரியர் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தன்னுடைய பேத்தியை காணவில்லை என கூறி ஆசிரியையின் தாத்தா போலீசில் புகார் அளித்துள்ளார். அதேபோல் அந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவரின் பெற்றோரும் தங்களது மகனை காணவில்லை என போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதனால் போலீசார்  பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி காணாமல் போனவர்களை பற்றி தீவிரமாக தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு பின் ஆசிரியரின் தாத்தா மற்றும் மாணவரின் பெற்றோர் இருவரும் தங்களது புகாரினை திரும்ப பெற்றுக் கொண்டனர். இதனையடுத்து ஆசிரியர் மற்றும் மாண வர் இருவரும் திரும்ப வந்து விட்டனர் எனவும் போலீசாரிடம் கூறியுள்ளனர். இதன்பின் அவர்கள் இரண்டு பேரும் காதல் வசப்பட்டு வீட்டை விட்டு ஒன்றாக வெளியேறி சென்ற விவரம் போலீசாருக்கு தெரியவந்தது. பின்னர் அவர்கள் இருவரையும் அழைத்து போலீசார் அவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். இதனையடுத்து அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும்  ஆசிரியருக்கு விரைவில் ஒரு மணமகனை தேர்வு செய்து திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.