குளத்திற்குள் பதுக்கி வைக்கப்பட்ட மதுபானங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை சிறப்பான முறையில் கொண்டாடப்படும். தற்போதே வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை களை கட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் உள்ள ஹர்பூர் என்ற பகுதியில் ஒரு குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் 150 லிட்டர் வெளிநாட்டு மதுபானங்களை பதுக்கி வைத்துள்ளனர்.

ஹோலி பண்டிகை வருவதால் மதுபானங்களை குளத்திற்குள் பதுக்கி வைத்துள்ளனர். இந்த மதுபானங்கள் ஹரியானாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் குளத்திற்குள் மதுபானங்களை பதுக்கி வைத்தது யார் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்