ராஜஸ்தானின் சிகார் மாவட்டம் நேச்சுவா பகுதியில், ஒரு திருமண விழாவின்போது நடந்த கொடூரம் மக்கள் மனதை உலுக்கியது. திருமண ஊர்வலத்தில் பங்கேற்ற ஒரு காளை, விழாவுக்குள் வந்ததால், அதில் இருந்த சிலர் அதற்கு எதிராக கோபத்துடன் நடந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற இருவர், பொலெரோ எஸ்யூவி காரை இயக்கி, காளையை பலமுறை மோதினர்.
राजस्थान पुलिस : मानवीय क्रूरता को करारा जवाब#JusticeForNandi#RajasthanPolice#SikarPolice#ZeroTolerance#NoCrueltyNoMercy pic.twitter.com/9vLaEgxAGn
— Rajasthan Police (@PoliceRajasthan) October 3, 2025
கடைசியில், காளையின் கழுத்தை வாகனத்தால் உரசியது போன்ற காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. அருகில் இருந்த ஒரு பெண் கதறி நிறுத்தக் கோரியும், வாகன ஓட்டுனர் கொலை செய்ததை வீடியோ காட்டுகிறது. இந்த சம்பவம் வைரலானதைத் தொடர்ந்து, பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். நீதியைக்கோரிய மக்கள் வீதியில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, இருவரும் கைது செய்யப்பட்டனர். ராஜஸ்தான் போலீசார், இந்த இருவரையும் பெண்கள் இரவில் அணியும் ஆடையை அணிய வைத்து, ஊர்வலமாக சிகாரில் அழைத்துச் சென்றனர். இந்த வீடியோவை போலீஸ் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது. சம்பவம் தொடர்பாக வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் மற்றும் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பரவியதைத் தொடர்ந்து, அரசு மற்றும் காவல் துறை மீதும் குடிமக்கள் நேரடி நடவடிக்கையை கோரியுள்ளார்கள்.
