ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த 20 வயது வாலிபரான சதீஷ் பாபு ஐபிஎல் போட்டியின் போது கிரிக்கெட் விளையாட்டில் அதிக அளவு பணத்தை பந்தயம் கட்டி நஷ்டம் அடைந்துள்ளார். மேலும் அவர் அதிகப்படியான கடனும் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மிகுந்த மன அழுத்தத்தில் காணப்பட்ட சதீஷ் பாபு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.