தங்கள் நாட்டுக்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என தாய்லாந்து அரசு அறிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்கும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டது தாய்லாந்து அரசு. தாய்லாந்தில் 30 நாட்கள் வரை இந்தியர்கள் விசா இன்றி தங்கலாம் என்று தாய்லாந்து அரசு அறிவித்திருக்கிறது. இலங்கையை தொடர்ந்து தாய்லாந்து அரசும், இந்திய சுற்றுலா பயணிகளுக்கு இந்த சலுகையை வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.