கடலூர் மாவட்டத்தில் உள்ள டி.புதுப்பாளையம் கிராமத்தில் பத்மநாபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ரோனமி டியாங்கோ குவாங்கோ என்ற பெண்ணும் பத்மநாபனும் காதலித்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். நேற்று நடுவீரப்பட்டு வெள்ளை கரையில் இருக்கும் திருமண மண்டபத்தில் தமிழ் கலாச்சாரப்படி காதலர்களுக்கு திருமணம் நடைபெற்றது.

இதுகுறித்து மணமகள் கூறியதாவது, தமிழ் கலாச்சாரம் மற்றும் இந்து முறைப்படி திருவிழா போல எங்கள் திருமணம் நடந்தது. இதில் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்தினர். இங்கே எல்லோரும் என்னை நன்றாக வரவேற்றனர். அன்பாக பழகினர். எனது திருமணத்தில் வயது முதிர்வு காரணமாக எனது பெற்றோர் கலந்து கொள்ளவில்லை. நேற்று நடந்த திருமணத்தை அவர்கள் ஆன்லைன் வீடியோவில் நேரலையாக கண்டு இருவரையும் வாழ்த்தியுள்ளனர்.