தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் 24ஆம் தேதி மற்றும் ஆகஸ்ட் 27 ஆகிய தேதிகளில் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஆகஸ்ட் 24ஆம் தேதி திருச்சிக்கு வருகை தர உள்ளார் .

இதனால் ஆகஸ்ட் 24ஆம் தேதி திருச்சிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை தருவதாலும்  மீண்டும் 26 ஆம் தேதி திருச்சியில் இருந்து சென்னை திரும்ப இருப்பதால் அன்றைய நாட்களில் ட்ரோன்கள் பரப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.